புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு விளக்க மறியல்

🕔 April 1, 2023

ரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (31) கரடியனாறு பகுதியில் உள்ள காணியில் தொல்பொருட்களை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொல்பொருள் இடமொன்றுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு லெப்டினன்ட் கேணல், ஒரு சார்ஜென்ட் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு கோப்ரல் ஆகியோரும் பௌத்த பிக்கு ஒருவரும் அடங்குவர்.

இவர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையல்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது கைதாகினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்