அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

🕔 March 21, 2023

ட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்று (21) காலை நடைபெற்ற போது, இது தொடர்பான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சட்டக் கல்லூரி பரீட்சைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என – நீதியமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பேரில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி 2020 டிசம்பரில் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி கவுன்சிலால் வெளியிடப்பட்டது.

இருந்த போதிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்க்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும் இந்த யோசனையை விமர்சித்ததோடு, இது பெரும்பான்மையான மாணவர்களுக்கு அநியாயம் இழைக்கும் வகையிலானது எனவும் தெரிவித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்