உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

🕔 February 24, 2023

ள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (24) அறிவித்தது.

அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்குமாறு திறைசேரியை வலியுறுத்துவதில் தலையிடுமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட மார்ச் 09 ஆம் திகதி – தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து தகவல்களுடன் கூடிய அறிக்கையையும் சபாநாயகரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்