நேபாளம்: அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலி

🕔 November 9, 2022

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டது.

நேபாளத்தில் நிலநடுக்கம் இன்று 9ஆம் திகதி அதிகாலை 1:57 மணிக்கு ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது.

இந்த நில அதிர்வு 6.6 ரிக்டர் அளவில் நேபாளத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு நில நடுக்கங்களும், ஒரு அதிர்வும் ஏற்பட்டதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில், நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்றபட்ட நிலநடுக்கமொன்றில், கிட்டத்தட்ட 9,000 பேர் கொல்லப்பட்டனர் பலியானமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்