நேற்று காணாமல் போன பாத்திமா ஆயிஷா, வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்பு
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 09 வயது சிறுமியின் சடலம், அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சிசிரிவி கமராக்கள் இல்லை எனவும், இதன்போது சிறுமி சம்பவமொன்றை எதிர்கொண்டிருக்கலாம் என்றும் விசாரணைகளை நடத்திய பொலிஸ் குழுக்கள் தெரிவித்துள்ளன.
பாத்திமா ஆயிஷா எனும் மேற்படி சிறுமி, நேற்று (27) காலை 10.00 மணியளவில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு, கோழி இறைச்சி வாங்கச் சென்ற நிலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.