அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுபினர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

🕔 March 28, 2022

– யூ.கே. காலித்தீன் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் அடைவுகளைப் பெற்றமையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடல் பொத்துவில், பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ. பகுர்டீன் தலைமையில் நடைபெற்ற போது, மேற்படி பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

பேரவையின் மாதாந்த நிகழ்வின் போது, அண்மையில் காலமான ஒன்றியத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இ. நடராஜனுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பேரவை றுப்பினர்களான கே.எல். அமீரின் புதல்வி பாத்திமா இனபா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டமைக்கும், எம்.எஸ். மலீக்கின் புதல்வர் அப்துர் றஹ்மான் மற்றும் மற்றுமொரு உறுப்பினர் எம்.எச். கலீபாவின் புதல்வி எம்.கே. ஜுமானா ஹசீன் ஆகியோர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா/தரப் பரீட்சையில் 09 ஏ சித்திகளை பெற்றமைக்கும் – ஞாபக சின்னம் வழங்கி பாராட்டப்பட்டதோடு, பேரவை உறுப்பினர் பீ. முஹாஜிரீன் – அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பாடலாக்கத்துக்கான சிறப்பு பரிசில் பெற்றமைக்காக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு, பேரவைக்கு எதிர்காலத்தில் தன்னால் முடியுமான சகல உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் கெளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  பேரவை உறுப்பினர்களின் நலன் மற்றும் தற்போது நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் இப் பேரவையானது சமூக செயற்பாடுகளிலும் உதவி புரியவேண்டுமென்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்