பேக்கரி உணவுகள், சிற்றுண்டிகளுக்கான விலைகள் நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு: பாணிக்கு 30 ரூபா வரை கூடுகிறது
கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் பாண் ஒன்றின் விலை ரூபாவால் 20 – 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இனிப்பு பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் மேலும் கூறியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் பல்வேறு பொருட்களின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சாப்பாட்டுப் பார்சல் ஒன்றின் விலை 20 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கொத்து விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. சிற்றுண்டிகளுக்கா விலைகளும் 05 ரூபாவால் அதிரிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: கோதுமை மா விலை அதிகரிக்கிறது