‘கொத்து’க்கு இலங்கை காப்புரிமை பெற வேண்டும்: கலாநிதி சரித ஹேரத் எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 March 8, 2022

‘கொத்துக்கு (கொத்து ரொட்டி) காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று சபை அமர்வில் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இத்தாலியில் உள்ள ‘பீட்சா’ மற்றும் அமெரிக்காவின் ‘ஹாம்பர்கர்ஸ்’ போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் ‘கொத்து’வை ஒத்ததாக மாற்றுவதற்கு இலங்கை செயல்பட முடியும் என்று அவர் இதன்போது கூறினார்.

‘கொத்து’ மட்டக்களப்பிலில் உருவானதாகக் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த கலாநிதி ஹேரத், தற்போது அதில் ஐஸ்கிரீம் கொத்து உட்பட பல வகைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கூறிய அவர், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் என்றார்.

இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் எனவும் கலாநிதி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்