வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
வீதி விபத்துக்களில் கடந்த இரண்டு மாதங்களில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் பெப்ரவரி 25 ஆம்திகதி வரையான காலப்பகுதியினுள் நடந்த 434 வீதிவிபத்துக்களில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் 177 பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற 43 வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.