சுதந்திர தினத்தையொட்டி, 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

🕔 February 3, 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்தும், நாளை (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேர், கேகாலையில் 18 பேர், வெலிக்கடையில் 17 பேர், களுத்துறையில் 13 பேர், போகம்பரையில் 11 பேர், மட்டக்களப்பில் 11 பேர், வாரியபொல சிறைச்சாலையில் இருந்து 10 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்