மூன்று லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றும், ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

🕔 January 22, 2022

ந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று (22) 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இது கடந்த வருடத்துக்குரிய பரீட்சை என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்று காரணமாக, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பல தடவை பிற்போடப்பட்ட நிலையில் இன்று நடைபெறுகிறது.

2,943 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில், 340,508 பேர் தோற்றுகின்றனர்.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்கு மாணவர்களை 9.00 மணியளவில் பரீட்சை மண்டபங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்