திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம்

🕔 December 30, 2021

நாட்டில் வருடமொன்றுக்கு திடீர் விபத்துக்களினால் சுமார் 12,000 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வருடமொன்றுக்கு 03 தொடக்கம் 04 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் விபத்துக்கள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்