மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

🕔 December 6, 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, பெப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர், வீட்டுக் காவலில் ஆங் சான் சூ ச்சி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிறைக்கு அனுப்படுவாரா, வீட்டுச் சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை.

ஆங் சான் சூ ச்சி மீது – ராணுவ அரசாங்கம் தொடுத்துள்ள பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

76 வயதாகும் அவர் மீது ஊழல், அரசு ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்