லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது
தெல்தெனிய நீதிமன்றின் பதிவாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மேற்படி ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.