எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு

🕔 October 14, 2021

ந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற – சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்த வசதி ஒக்டோபர் 2021 தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பாவனையாளர்கள் தங்கள் கைப்பேசி மற்றும் நிலையான தொலைபேசி எண்களை தக்கவைத்துக்கொண்டு சேவை வழங்குநர்களை மாற்றிக்கொள்ள முடியும்.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்த சேவை செயல்படுத்தப்படும் என்றும், பாகிஸ்தானில் இந்த முறைமையை செயல்படுத்துவதில் வெற்றி பெற்றதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்