நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்

🕔 August 21, 2021

நாடு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 02 ஆயிரம் ரூபா – உதவிக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இந்த உதவித் தொகை வழங்கல் தொடர்பாக அனைத்து அரச அதிபர்களுக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எம். எம். சித்தரானந்த அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் நாடு முடக்கப்பட்டபோது, மக்களுக்கு உதவித் தொகையாக 05 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்