கூட்டெரு இறக்குமதிக்கு மாத்திரமே இடைக்காலத் தடை: அமைச்சர் விளக்கம்

🕔 June 25, 2021

கூட்டெருவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சேதனப் பசளைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சேதனைப் பசளை இறக்கு மதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தமைக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

பெரும் போகத்திலிருந்து சேதன விவசாயத்துக்கு நாடு மாற வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, ரசாயன உரத்துக்கு தடை விதிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்