
எதிர்வரும் 14ஆம்திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பயணத்தடை, 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, நேற்றைய தினம் ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, 21ஆம் திகதி வரை பயணத்தடை நீடிக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



