பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை

🕔 April 11, 2021

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மேலும் சில பொருட்களை தடை செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இவ்வாறு தடை செய்யப்படுகின்ற, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீனுக்கு பதிலாக மாற்று உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டம் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் – ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன், பிளாஸ்ரிக், காற்றடைக்கப்பட்ட பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்கள், 20 கிராம் மற்றும் 20 மில்லிலீற்றருக்கு குறைந்த நிறைகொண்ட ஷஷே பைக்கற்றுக்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்