புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர

🕔 March 13, 2021

புர்கா அணிவதைத் தடை செய்வதற்கானன அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒன்றாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” எனவும் அவர் கூறினார்.

சட்டவிரோதமாக மதம் மற்றும் அராபிய மொழியை மாத்திரம் கற்பிக்கும் மத்ரஸா பாடசாலைகளையே தடைசெய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்