கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி

🕔 December 9, 2020

கொரோனா காரணமாக மரணித்தவர்களை எரிப்பற்கு உறவினர்கள் அனுமதி வழங்காத நிலையிலும் வேறு சில காரணங்களின் பொருட்டும், இதுவரையில் இறுதிச் சடங்கு நடத்தப்படாத பிரேதங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கை ஒன்றை ஆராய்ந்த சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

கொரோனாவினால் மரணித்த நிலையில், இதுவரை இறுதிச் சடங்கு நடத்தப்படாமல் 19 சடலங்கள் நாட்டின் பல வைத்தியசாலைகளிலும் நிண்ட நாட்களாக பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக, மேற்படி சடலங்களை தகனம் செய்ய முடியும் என, சட்ட மாதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்