உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர

🕔 December 8, 2020

லக சுகாதார அமைப்பு அங்கிகரிக்கும் வரை, கொவிட் -19க்கான எந்தவித தடுப்பூசியையும் இலங்கை பெறாது என்று, சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் – நாடு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி தற்போது கணிசமாக குளிர்ந்த வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு அந்த வசதி இல்லை. வைரஸ் தொடர்பாக இதுவரை எந்தவொரு தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்படவுமில்லை.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்