பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது

🕔 August 8, 2020

பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது.

தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன.

  • ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் முஸம்மில் (இவர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பேச்சாளர்)
  • மர்ஜான் பளீல் ஆகியோரை – இவ்வாறு பொதுஜன பெரமுன நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மட்டுமே பொதுஜன பெரமுன கட்சி சார்பாாக வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதர் மஸ்தான் – சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்