தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

🕔 October 27, 2015

Arrested - 01– க.கிஷாந்தன் –

னது தாயினுடைய சகோதரியின் கணவரை, கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், யுவதியொருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே, குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

உடலை முழுமையாக மூடும் வகையிலான ஹபாயா ஒன்றை அணிந்துவந்த நபர் ஒருவர்தான் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக, வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த காயமடைந்த நபரின் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதோடு, கொள்ளையிட்ட பணத்தையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 31 வயதுடைய யுவதியாவார். இவர் காயமடைந்த நபருடைய மனைவியின் சகோதரி மகளாவார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டிருந்த வேளையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததோடு, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி  யுவதி, சவூதி அரேபியாவில் 06 மாத காலம் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில்செய்த நிலையில், சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நாடு திரும்பியவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபராக குறித்த யுவதி, மதுபோதைக்கு அடிமையாளவர் என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தான் அதிகளவான கடன்சுமைக்கு முகங்கொடுத்திருப்பதால் இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டதாக, சந்தேக நபரான ராசையா நிலூஷா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த நபர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்