இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம்

🕔 October 11, 2019

– நூறுள் ஹுதா உமர் –

டலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த நிலையில், 22 நாட்களின் பின் கரை திரும்பிய சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த றியாஸ் மற்றும் ஹாரிஸ்எனப்படும் மேற்படி மீனவர்கள், திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திடம் நேற்று வியாழக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்துவிட்டு இரவு 11.20 மணியளவில் வீடு வந்தடைந்தனர்

இவர்களுடன் சென்றிருந்த மீனவர் சண்முகம் சிறி கிருஸ்ணண் என்பவர், இவர்கள் வழி தவறி 10 நாட்களின் பின்னர், இறந்ததாகவும் அவரின் உடலை தாங்கள் 06 நாற்களாக தங்களுடன் வைத்துக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தங்களின் மிதக்கும் உடையில் சுற்றி கடலில் விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

அத்துடன் அவருடைய பிரிவால் துயறுற்றிருக்கும் அவரின் மனைவி பிள்ளைகள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இறந்தவரின் குடும்பத்துக்கு வாழ்வாதரத்தை மேன்படுத்த, மீனவ அமைப்புக்களும் மீன்பிடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மனிதாபிமான முறையில் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த மீனவர்கள் அவர்களின் படகில், தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்த சிங்கள சகோதர மீனவர்களுக்கும், இரவு பகல் பாரது அற்பணிப்புடன் செயல்பட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தினருக்கும், அதன் முக்கிய நிர்வாகிகளுக்கும் அனைத்து மீனவத் தொழிலாளர்களுக்கும் பொலிஸ், கடற்படை , மற்றும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கும், ஏனைய முக்கிய அதிகாரிகள், ஊடகங்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும் வீடு திரும்பிய மீனவர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தொடர்பான செய்தி: காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் மீட்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்