இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர

🕔 June 20, 2019

ல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில், அங்குள்ள மூவின மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்துள்ளார். 

“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின மக்களுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனவே கல்முனை பிரதேசத்திலுள்ள சகல இன மக்களுக்கும் இடையில், பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்