றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

🕔 May 28, 2019

ன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையும் அதில் சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்து, அதற்கு எதிராக முசலி பிரதேச சபை கண்டனத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது.

முசலி பிரதேச சபையில்  இன்று செவ்வாய்கிழமை கொண்டுவரப்பட்ட மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியான் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின் போதே  இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆதரவளித்தமை குறிபிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்