அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம்

🕔 March 10, 2019

ம்பள அதிகரிப்பு கோரி, அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சகயீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அன்றைய தினம் பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றினையும் இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று, அவர்களுக்கான சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் அருகில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் அசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவையாளர் சங்கம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட 18 சங்கங்கள் கலந்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்