
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமையினை சிறப்பிக்கும் வகையில், இன்று சனிக்கிழமை கண்டி – உலப்பனையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
நாலப்பிட்டிய மலாய் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், மலேசியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஸ்மி ஸைனுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

