இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

🕔 August 25, 2015

Susil premajayanthக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 14 ஆம் திகதி நீக்கியிருந்தார்.

அத்தோடு,  ஐ.ம.சு.முன்னணியின் செயலாளராக சுசில் செயற்படுவதற்கு எதிராக, நீதிமன்ற உத்தரவொன்றும் பெறப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இதேவேளை, ஐ.ம.சு.முன்னணயின் பதில் செயலாளராக, பேரசிரியர் விஷ்வ வர்ணபாலவை, ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, சுசில் பிரேமஜெயந்த – தற்போது, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்