எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்?
புதிய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், எஸ்.பி. திஸாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலமாக, இவர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.பி. திஸாநாயக்கவை தெரிவு செய்யப்படுவதற்கான அதிக சந்தர்ப்பமுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதேவேளை, ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவின் பெயரும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.