அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

🕔 March 4, 2018

ரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, புதிய சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதியிடப்பட்டு, மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுபெறும் வயதெல்லை 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் படி, அரச ஊழியர்களின் ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய சுற்று நிரூபத்தின் அடிப்படையில் அரச சேவையில் நீடித்திருக்கக்க கூடிய உச்சபட்ச வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்