தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது

🕔 February 9, 2018

லங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சித்த பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என, சுங்க திணைக்களத்தின் ஊடக பதில் பேச்சாளர் தெரிவித்தார்.

பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மேற்படி பெண், 24 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை கடத்த முயற்சித்த போது கைது கைதாகியுள்ளார்.

சென்னை நகருக்கு புறப்படவிருந்த யு.எல். 129 எனும் விமானத்தில் பறப்பதற்கு, இவர் திட்டமிட்டிருந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்