அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்

🕔 January 30, 2018

– எஸ்.எம். சப்றி –

ம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்
.

கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின் ஆதிக்கத்தையும் தாண்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்த நாங்கள், இந்த தேர்தல் வெற்றியுடன் அம்பாறையில் அடகுவைத்த யானையை திருகோணமலையில் மீட்டுப்போம்.

இனவாதத்தை கக்கும் சிறுபான்மை கட்சிகளை பெப்ரவரி 11ஆம் திகதியுடன்  திருகோணலையை விட்டு விரட்டி அடிப்போம். இதை அறிந்தே தற்போது எதிரணியினர் வீடு வீடாக சென்று உங்களுக்கு வீடு தருகிறோம், வேலை தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். கடந்த இருபது வருடங்களாக இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இங்குள்ள பெரும்பாலான சபைகளும் மாகாண சபையும் காணப்பட்டது. இருந்தும் இவர்களால் இங்குள்ள மக்களுக்கு ஒரு செங்கல்லை கூட வழங்க முடியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியால் பாடசாலைகள் வழங்கப்பட்டன. அந்தக் கட்சி வழங்கிய வீடுகளிலேயே மக்கள் இன்றும் வசிக்கின்றனர்.

ஆகவே மத்திய அரசாங்க அதிகாரத்தில் உள்ள எம்மிடம் இந்த சபைகளின் அதிகாரங்களை கையளியுங்கள். அன்று எனது தந்தை காலத்தில் காணப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் யுகத்தை மீண்டும் இங்கு ஏற்படுத்தி காட்டுகிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்