துபாயிலிருந்து 06 கிலோகிராம் தங்க நகையுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் கைது
துபாயிலிருந்து சுமார் 06 கிலோ எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த நபர் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகள் இன்று செவ்வாய்கிழமை காலை கைது செய்தனர்.
சந்தேக நபர் கையில் கொண்டு வந்த பயணப் பொதியில் குறித்த நகைகளை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சரியான எடை 5.8 கிலோ கிராமாகும். இதன் பெறுமதி 29.6 மில்லியன் ரூபாயாகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.