தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்

🕔 October 11, 2017

– ரெ. கிறிஷ்­ணகாந் –

தாய்­வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி அமெ­ரிக்­கா­வி­லுள்ள அந்த வங்­கியின் கணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை தமது கணக்­கு­க­ளுக்கு பரி­மாற்றிப் பண­மோ­சடி செய்த சம்­ப­வத்தின் பிர­தான சுத்­தி­ர­தா­ரி­யென கரு­தப்­படும் மற்­றொரு சந்­தேக நப­ரான லிட்ரோ கேஸ் (அரச)  நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்க நேற்­று­முன்­தினம் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் சரணடைந்த­மையை அடுத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இதற்கு முன்னர் இச்­சம்­பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற முன்னாள் இரா­ணுவ மேஜர் ஜெனரல் ஜாலிய நம்­மு­னியின் மக­னான ஜனக்க சமிந்த நம்­முனி கடந்த 07 திகதி கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் மூலம் கிடைத்த தக­வல்­களைக் கொண்டு ஷலீல முன­சிங்­கவைத் தேடி குற்றப் புல­னாய்வு பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

தன்னைப் பொலிஸார் தேடு­வ­தனை அறிந்து கொண்ட ஷலீல முன­சிங்க, நுகேகொடை, நாலந்­தா­ரா­ம­யவில் மறைந்­தி­ருந்த நிலையில், பொலி­ஸா­ருக்கு தனது இருப்பிடம் தொடர்பில் தகவல் தெரிய வந்­ததை அறிந்து கொண்­ட­தை­ய­டுத்து ஜனாதிபதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்­ஸவின் மூலம் சர­ண­டைந்தார்.

கைது செய்­யப்­பட்­டுள்ள ஷலீல முன­சிங்க, புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தலைவர் ஆவார். இக்­கட்­சியின் சின்­னத்­தி­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்டு வென்றார் என்­பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு அப்­போ­தைய நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் லிட்ரோ கேஸ் நிறு­வனத் தலை­வ­ராக ஷலீல முன­சிங்க நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

தாய்­வானில் அமைந்­துள்ள பார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணக்குகளுக்குள் ஊடு­ருவி சுமார் 60 மில்­லியன் டொலர்­களை (சுமார் 920 கோடி ரூபா) இந்த ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஹெக்கர் குழு­வினர் மோசடி செய்­துள்­ளனர்.

இக்­கொள்­ளையில் ஈடு­பட்ட குறித்த குழுவைச் சேர்ந்த இலங்கை உறுப்­பி­னர்கள் மூவரது கணக்­கு­களில் சுமார் 1. 3 மில்­லியன் டொலர்கள் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. லங்­கை­யி­லுள்ள 03 கணக்­கு­க­ளுக்கு வந்த 1.3 மில்­லியன் டொலர்­களை தேடி வரு­கிறோம் என ஏ.எவ்.பியிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்­படி பாரிய பண­மோ­சடி தொடர்பில் ஃபார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் ஊடாக இலங்கை வங்கிக் கிளைக்கு அறி­விக்­கப்­பட்ட அதே­வேளை, தாய்­வா­னி­லுள்ள அவ்­வங்­கியின் மூல­மா­கவும் இது தொடர்பில் அவ்­வங்­கிக்கு மின்­னஞ்சல் ஒன்றும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

கடந்த 3 ஆம் திகதி சைபர் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்டு ஃபார் ஈஸ்டர்ன் வங்கிக் கணக்­கி­லி­ருந்து மோசடி செய்­யப்­பட்ட பணத்தில் தனக்­கு­ரிய பங்கு தனது கணக்குகளில் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளதா என்­ப­தனை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக, முதல் சந்­தேக நப­ரான நம்­முனி, இரு முறைகள் கொழும்­பி­லுள்ள இலங்கை வங்கிக் கிளையொன்­றுக்கு வந்து விசா­ரித்துச் சென்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவரின் நட­வ­டிக்கை தொடர்பில் வங்கி முகா­மை­யாளர் சந்­தேகம் கொண்டு அப்பணம் எங்­கி­ருந்து வைப்­பி­லி­டப்­ப­டு­கி­றது எனக் கேட்­ட­போது, அவை வர்த்­தக நடவடிக்­கை­க­ளுக்­காக கிடைத்த நிதி என அவர் பதி­ல­ளித்­தி­ருந்தார்.

அமெ­ரிக்க வங்­கி­யி­லுள்ள நிதியை தாய்­வா­னி­லுள்ள வங்­கிக்கு பரி­மாற்றம் செய்து அவற்றில் தமக்­கு­ரிய பங்­கினை ஸ்லிப்ஸ் பரி­மாற்ற முறையில் Sri Lanka Interbank Payment System (SLIPS) இலங்­கை­யி­லுள்ள இலங்கை வங்­கிக்­கி­ளைக்கு பரி­மாற்­றி­யுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

இந்­தி­யா­வி­லுள்ள ஹெக்கர்ஸ் (இணைய ஊடு­ரு­விகள்) சில­ருடன் ஒன்­றி­ணைந்து ஷலீல முன­சிங்க மற்றும் ஜனக்க சமிந்த நம்­முனி ஆகியோர் இந்த மோச­டியை திட்டமிட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.
அதற்­க­மைய இம்­மோ­ச­டியில் பெறப்­பட்ட பணத்தின் நூற்­றுக்கு 50 சத­வீ­த­மா­னவை ஹெக்­கர்­க­ளுக்கும், நம்­மு­னிக்கு 30 வீதமும், ஷலீ­ல­வுக்கு 20 வீதமும் பெற்­றுக்­கொள்ள பேரம் பேசப்­பட்­டி­ருந்­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த மோச­டி­யுடன் தொடர்­பு­டைய இந்­திய ஹெக்­கர்­களும் அண்­மையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த நிலையில், கொழும்­பி­லுள்ள முதற்­தர ஹோட்­ட­லொன்றில் வைத்து அப்­பணம் பகி­ரப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஷலீல நேற்று முன்­தினம் இரவு குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

இந்நிலையில், ஷலீல முணசிங்க நேற்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப் பட்டதை யடுத்து இன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இன்று அவரை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, தொடர்ந்தும் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்