மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை

🕔 September 22, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.

ஜனாஸா, நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20/1, அல்பேட் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு என்ற முகவரியிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய வாசஸ்தலத்தில் இருந்து, கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவர் பாடசாலை முன்னாள் அதிபர் மர்ஹூம் என்.எம்.ஏ. ரவூபின் மனைவியும், டொக்டர் ஹபீஸ், ரஹஸீர், ஹக்கீம், ஹஸான், ஹஸார் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

இவர், தனது கணவர் கடமையாற்றிய தெஹிதெனிமடிகே, கலாவெவ, ஹோராப்பொல மற்றும் தம்பாலை ஆகிய கிராமங்களிலும் வசித்துள்ளார்.

ஹபுகஸ்தலாவையை பிறப்பிடமாகக்கொண்ட இவர், தற்போது அருகிவரும் அரபுத் தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனம் கிடைப்பதற்கு அனைவரும் பிரார்த்திப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்