பூமியை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி விட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

🕔 June 21, 2017

னித இனம் தொடர்ந்தும் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020ஆம் ஆண்டிலும், செவ்வாய்க்கு 2025ஆம் ஆண்டுக்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என்று, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரமானது, எதிரெதிர் நாடுகளை ஒன்றிணைத்து, பிரச்சனையை ஒன்றிணைந்து கையாள வழிவகை செய்யும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். மனித இனம் பூமியில் அதிக காலம் வாழ முடியாது. ஏனென்றால் பூமி, ஒஸ்ட்ராய்டு என்று அழைக்கப்படும் பெரிய விண் பாறைகளால் மோதப்படவும், நம் சூரியனாலேயே விழுங்கப்படவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பூமி முழுவதும் அழிந்துவிடும். எனவே தொலைதூர கிரகங்களுக்கு செல்வதே மனித இனத்தின் அழிவைத் தடுக்க ஒரே வழி என்று அவர் குறிப்பிடுகின்றார்.

விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளான ஒஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் கொஸ்மோலஜி உள்ளிட்ட படிப்புகளை இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் கற்க வேண்டும். மனித இனத்தின் இந்த தொலைதூரப் பயணமானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவது பூமியை அச்சுறுத்துவதாக உள்ளது.

பூமியை விட்டு நாம் கட்டாயம் செல்லவேண்டும். வேறொரு சூரியனைக் கொண்ட கிரகத்தைக் கண்டறிந்து, அங்கு சென்று வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், யாருமே போகாத கிரகத்தில் நாம் சென்று வாழ வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.

இன்னும் 30 வருடங்களில் பூமியிலிருந்து வெளியேற ஏதுவாக, லூனார் பேஸ் என்று கூறப்படும் விண்வெளி கொலனிகளை விஞ்ஞானிகள் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்