தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல்

🕔 June 13, 2017

ன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க கோரி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், தனது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்புப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர்  இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

எனவே, சரியான விசாரணை ஒன்றை நடத்தி முடிக்கும் வரையில் அல்லது சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில், தன்னை கைது செய்வதை தடுக்கும் விதமாக இடைக்கால தடையுத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறி கோரி இந்த மனுவினை தேரர் தாக்கல் செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்