மாலை வருகிறார் மோடி; இரண்டு நாட்கள் தங்கியிருந்து வெசக் நிகழ்வுகளில் பங்கேற்பார்

🕔 May 11, 2017

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று மாலை 05.30 மணியளவில் இலங்கை வந்தடையவுள்ளார்.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் மோடி – கொழும்பு, கண்டி மற்றும் ஹற்றன் பிரதேசங்களில் இடம்பெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

கங்காராம வெசக் வலயத்தை திறக்கும் நிகழ்விலும் இந்தியப் பிரதமர் மோடி இன்று மாலை கலந்து கொள்ளஉள்ளார்.

நாளை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ள சர்வதேச வெசக் நிகழ்விலும் அவர் பங்கேற்பார்.

பிரதமராக பதவி ஏற்ற பின்னர், இலங்கைக்கு இரண்டாவது முறையாக மோடி விஜயம் மேற்கொள்கிறார்.

இதேவேளை சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வேறு நாடுகளின் தலைவர்களும் இலங்கை வந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதி நாள் நிகழ்வுக்கு நேபாள ஜனாதிபதி பண்டாரி தலைமை தாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்