அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்
– பிறவ்ஸ் முகம்மட் –
“மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளும், பொதுக்கூட்டங்களும் இதன்போது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் வௌ்ளிக்கிழமை கல்முனையில் முதல் நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், சேனைக்குடியிருப்பு சனசமூக சிகிச்சை நிலையம், இஸ்லாமபாத் சனசமூக சிகிச்சை நிலையம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடம் மற்றும் கல்முனை ஆயுர்வேத வைத்தியாலை என்பன திறந்து வைக்கப்படவுள்ளன.
அத்துடன், கல்முனை றோயல் வித்தியாலயத்தின் நீண்டநாள் குறைபாடாகவுள்ள வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. அதன்பின்னர், கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மறுநாள் சனிக்கிழமை பொத்துவில் மண்ணில் அபிவிருத்தி விழாவும் பொதுக்கூட்டமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் சுகாதார பிரதி அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர், கட்சியின் தவிசாளர் ஏ.எல்.ஏ. மஜீட் மற்றும் கல்முனை மாநகரசபை மற்றும் கட்சியின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
“மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளும், பொதுக்கூட்டங்களும் இதன்போது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் வௌ்ளிக்கிழமை கல்முனையில் முதல் நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், சேனைக்குடியிருப்பு சனசமூக சிகிச்சை நிலையம், இஸ்லாமபாத் சனசமூக சிகிச்சை நிலையம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடம் மற்றும் கல்முனை ஆயுர்வேத வைத்தியாலை என்பன திறந்து வைக்கப்படவுள்ளன.
அத்துடன், கல்முனை றோயல் வித்தியாலயத்தின் நீண்டநாள் குறைபாடாகவுள்ள வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. அதன்பின்னர், கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மறுநாள் சனிக்கிழமை பொத்துவில் மண்ணில் அபிவிருத்தி விழாவும் பொதுக்கூட்டமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் சுகாதார பிரதி அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர், கட்சியின் தவிசாளர் ஏ.எல்.ஏ. மஜீட் மற்றும் கல்முனை மாநகரசபை மற்றும் கட்சியின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.