விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

🕔 March 29, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 22 ஆம் திகதி, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த நிலையிலேயே அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10 ஆம் திகதி, விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில், தனக்கு இதுவரை பிணை வழங்காமைக்கு எதிர்பு தெரிவித்து, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரச வாகனங்களை  கடந்த ஆட்சிக்காலத்தில் முறைக்கேடாக பயன்படுத்தியமை காரணமாக, 90 லட்சம் ரூபா நஷ்டத்தினை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்