நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

🕔 March 29, 2017

னுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில், புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பது, இன ஐக்கியத்துக்கு பாதமாக  அமையுமென தெரிவித்துள்ள அமைச்சர், அதுவும் அங்குள்ள பழைமை வாய்ந்த பள்ளிவாயல் ஒன்றின் அருகில் இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொள்ள எடுக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறும் கோரியுள்ளார்.

புத்தர் சிலையை நிர்மாிணப்பதற்கான முன்னேற்பாடாக, பௌத்த கடும் போக்காளர்கள் இன்று புதன்கிழமை பாத யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதால், நாச்சியாதீவு கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதே வேளை இந்த முயற்சிகள் குறித்து நாச்சியாதீவு அமைப்புக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளன.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்