பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு

🕔 February 28, 2017

யர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், புதிய பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், இவர் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராகப் பதவியேற்கவுள்ளார்.

பிரதம நீதியரசராகக் கடமையாற்றி வந்த கே. ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து, புதிய நீதியரசரை நியமிக்கும் பொருட்டு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ. சித்ரசிறி ஆகியோரின் பெயர்களை, அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தார்.

இதற்கமைய, நேற்றிரவு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்பு சபை, நாட்டின் 45ஆவது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்பைத் தெரிவு செய்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்