நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி

🕔 February 14, 2017

Hasan Ali - 097முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுத் தீர்மானத்தில், கரையோர மாவட்டக் கோரிக்கை கை விடப்பட்டுள்ளமை குறித்து, அந்தக் கட்சியின் மூத்த தியாகிகளில் ஒருவரான எம்.ரி. ஹசனலி வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

கரையோரக் கோரிக்கையினை ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் போது, தான் வலியுறுத்தி வந்ததாகவும், இப்போது கட்சியில் தான் இல்லாத வெறுமையை உணர்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்கையில்;

“கடந்த 11ஆம் திகதி இரவு நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்திலிருந்து நான் வெளி­யே­றி­யதும் கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைப் பின்­தொ­டர்ந்து என் வீட்­டுக்கு வந்து ‘என்னை மன்­னித்து விடுங்கள். பல சந்­தர்ப்­பங்­களில் உங்கள் மனதை நான் புண்­ப­டுத்தி விட்டேன்’ என்றார். அரை மணித்­தி­யாலம் அவ­ரது முகத்தைப் பார்க்­கா­மலே இருந்தேன்.

பின்பு ‘லீடர் நீங்கள் திரும்­புங்கள். நான் ஓய்வாக இருக்க விரும்­பு­கிறேன்’ என அவரை அனுப்பி வைத்தேன். என்றார்.

கடந்த 11ஆம் திகதி தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அவ­சர கட்­டாய உயர்­பீடக் கூட்­டத்தின் போது கட்­சியின் செய­லா­ள­ராக மன்சூர் ஏ.காதர் நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இது­வரை காலம் செய­லாளர் நாய­க­மாகக் கடமை­யாற்­றிய எம்.ரி. ஹசன் அலி பத­வி­யி­ழந்தார்.

இது­தொ­டர்பில் ஹசன் அலியை ஊடகமொன்று தொடர்பு கொண்­ட­போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; “கண்டி பொல்­கொல்­லையில் நடைபெற்ற பேராளர் மாநாட்டின் போது எனது செய­லாளர் பத­விக்­கு­ரிய அதி­கா­ரங்கள் பறிக்கப்பட்டு மற்­றுமோர் செய­லாளர் நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் நான் சகல அதி­கா­ரங்­க­ளையும் கொண்ட செய­லாளர் பத­வியே வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தேன். அதையே கேட்டேன். செய­லாளர் பதவியுடன் தேசியப் பட்­டி­யலில் உறுப்­பினர் பத­வி­யையும் தரு­வ­தாக பல தட­வைகள் வாக்கு­றுதி வழங்­கிய கட்­சியின் தலைவர் என்னை ஏமாற்­றி­விட்டார்.

கடந்த பேராளர் மாநாட்டின் நிய­ம­னங்­க­ளுடன் எனது 30 வருட அர­சியல் வாழ்க்­கைக்கு முடி­வு­கட்­டப்­பட்­டுள்­ளது. தவி­சாளர் பத­வியை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு தலைவர் மற்றும் உயர்­பீட உறுப்­பி­னர்­களால் என்­னிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. வினய­மாகக் கேட்­கப்­பட்­டது.  ‘ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பறித்­தெ­டுத்து தரும் பத­வியை ஏற்­றுக்­கொள்ளும் வழி­கெட்ட ஆள் நான் இல்லை எனக்­கென்று தனித்­துவம் உள்­ளது. எனது தனித்துவத்தை எவ­ருக்கும் அடகு வைக்க மாட்டேன். தவி­சாளர் பத­வியை கடைசிவரை ஏற்­றுக்­கொள்ள மாட்டேன்’ என்றேன்.

“செய­லாளர் பத­வியை வகிப்­பவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என யாப்­பிலும் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தலை­வரே உங்கள் பிரச்­சினை நான் தானே? எனக்­கா­கத்­தானே இதெல்லாம். நானே கூறு­கிறேன். செய­லாளர் பத­வியை ஒருவருக்கே கொடுங்கள். ஒரு கட்­சியில் தலைவர் மற்றும் செய­லாளர் பத­வி­களே முக்கி­ய­மா­னவை. இவற்றை மலி­னப்­ப­டுத்த வேண்டாம் என்று உச்சபீட கூட்­டத்தில் தலை­வ­ரிடம் தெரி­வித்தேன்.

12ஆம் திகதி நடை­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு எனக்கு அழைப்­பிதழ் தர­வில்லை. தபாலில் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறி­னார்கள். ஆனால் எனக்குத் தபாலில் அழைப்­பிதழ் கிடைக்­க­வில்லை.

எனது செய­லாளர் பதவி விவ­காரம் ஒன்றரை வருட கால­மாக தேசியப் பட்­டியல் விவகா­ரத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்­தது. இப்­போது தலைவர் எனது விவ­கா­ரத்­திக்கு முடிவு கண்டு விட்டார்.

பேராளர் மாநாட்­டுக்­கான அழைப்­பி­தழ்கள் எழு­து­வது தொடர்­பான வேலைகள் கட்சியின் தலைமைக் காரி­யா­ல­யத்­திலே நடை­பெ­று­வது வழக்கம். ஆனால் இம்­முறை அனைத்துப் பணி­களும் தலை­வரின் அமைச்சு காரி­யா­ல­யத்­திலே இடம்­பெற்­றுள்­ளன.

பேராளர் மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னங்கள் பற்றி எனக்கு அறியக்கிடைத்­தது. அந்தத் தீர்­மா­னங்­களில் 30 வருட கால­மாக இருந்து வந்த கரையோர மாவட்டக் கோரிக்கை இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ளது. மறைந்த தலைவரின் அபிலாஷையாக இது இருந்தது.

இந்தக் கோரிக்கையை நான் ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். கட்சியில் நான் இல்லாத வெறுமையை இன்று உணர்கிறேன்.

சமூகத்தையும் கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் என்று துஆ கேட்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்