கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

🕔 February 12, 2017

Bauss issue - 02– எம்.ஜே.எம். சஜீத் –

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்­கி­ழக்கு கரை­யோர தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தின் செயற்­பாட்­டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார்.

தென்கிழக்கு கரை­யோர தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பு, நேற்று சனிக்கிழமை அக்­கரைப்­பற்றில் இடம்பெற்றது.  இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளார். இவர் தனது சுய விருப்பத்தின்அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இதன்காரணமாக தென் கிழக்கு கரை­யோர பிர­தே­சங்­களில் தனியார் பஸ் சேவைகளில் ஈடு­பட்டு வரும் பஸ் உரி­மை­யா­ளர்கள் பல்­வே­றான பிரச்­சி­னை­க­ளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வரு­கின்றனர். எனவே, சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் உரிய நட­வ­டிக்­கைகளை எடுக்­கு­மாறு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தத் தீர்வும்  கிடைக்கவில்லை. இதுவிடயமாக சம்மந்தப்பட்ட தரப்பினர் தீர்வினை வழங்க தவறும் பட்­சத்தில் வேலை நிறுத்­தத்தில்ஈடு­ப­ட­வுள்­ளோம்.

கடந்த காலங்­களில் இலங்கைப் போக்­கு­வ­ரத்து அதி­கார சபை­யி­ன­ருக்கும் தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தி­ன­ருக்­கு­மி­டையில் பஸ்­களை சேவையில் ஈடுபடுத்தும் விட­யத்தில் பல்­வே­றான பிரச்­சி­னைகள் எழுந்­தன. இப்­பி­ரச்­சி­னை­களை பல்­வேறு தரப்­பி­ன­ருக்கும் அறி­யப்­ப­டுத்­தியும் எவ்­வித தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை. இதனால் வாகரை நீதி மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் அடிப்­ப­டையில் இவ்­விரு சாராரும் ஒன்­றி­ணைந்தசேவையில் ஈடு­ப­டு­மாறு, நீதிமன்றம் உத்­த­ர­விட்­டது. இதற்­க­மை­வாக எவ்­வித பிரச்சி­னை­களும் இன்றி பொது­மக்கள் சேவை இடம்­பெற்று வந்­தது.

இருந்த போதிலும் அண்­மையில் கல்­மு­னையில் இருந்து வாகரை ஊடாக திருகோணம­லைக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக, சொகுசு பஸ் என்ற போர்­வையில் இரண்டு புதிய பஸ் வண்­டி­க­ளுக்கு அதி­கா­ரிகள் அனு­மதி வழங்­கி­யுள்­ளனர். இதனால் ஏலவே இவ்­வழி ஊடாக சேவையில் ஈடு­படும் பஸ் உரி­மை­யா­ளர்கள் பல்­வே­றான சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். ஏற்­க­னவே சேவையில் ஈடு­படும் பஸ் வண்­டி­க­ளுக்கு போதிய வரு­மானம் இல்லாத நிலையில் புதிய பஸ் வண்­டிகள் சேவையில் ஈடு­ப­டு­வதால், எமது வாழ்­வாதாரம் கேள்­விக்­குறியாகி­யுள்­ள­து.

ஏற்­க­னவே இப்­பாதை ஊடாக இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான 14 பஸ் வண்­டி­களும், தனியார் பஸ்உரி­மை­யா­ளர்­களின் 21 பஸ்­வண்­டி­களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மேல­தி­க­மாக இரண்டு புதிய சொகுசு பஸ்கள் தற்காலிக அனு­ம­தியின் பேரில் சேவையில் ஈடு­பட்டுவரு­வதால் பல்­வே­றான வீதி விபத்­துக்­களும் இன்­னோ­ரன்ன பிரச்­சி­னை­களும் எழுந்­துள்­ளன.

மேலதிகமாக தனியார் சொகுசு பஸ்­களை சேவையில் ஈடு­ப­டுத்­து­வ­தாக இருந்தால் அவற்றை ஏற்கனவே அனு­மதி பெற்ற உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­குவதுதான் நியாயமாகும். அவ்வாறு வழங்கினால், புதி­தாக எவ்­வித பிரச்­சி­னையும் எழ மாட்டாது. சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தமக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அனுமதியினை வழங்குவது கண்டிக்கத்தக்க விடயம்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானாவும் கருத்துத் தெரிவித்தார்.Bauss issue - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்