றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி
🕔 December 26, 2016
– எம்.வை. அமீர் –
சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி. எஸ்.எல். றியாஸ் எழுதிய “Interview Techniques and Skills” எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம். நிஜாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரஸ் கே.எம். ஜவாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வருகை தந்திருந்தார்.
புத்தகத்தின் அறிமுகத்தை கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பி.ரி.ஏ. ஹசன் வழங்கினார்.
நூலாசிரியரின் தந்தை சுலைமாலெப்பை – நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.