விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது

🕔 December 5, 2016

bridge-011– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் பிரச்சினையாக இருந்து வந்த, கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலத்தினை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும் நீர்த்தாவரங்கள் விளைந்து காணபபட்டமையினாலும், அந்தப் பாலத்தினை அகற்றுமாறு பிரதேச விவசாயிகளும், மீனவர்களும் மிக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தப் பாலமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிணறுகளை அமைக்கப் பயன்படும் கொட்டுகளைக் கொண்டு தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டது. அப்போது, ஆற்றினைக் கடந்து செல்வதற்கு இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வேறு வழிகள் இல்லாமையினால், இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.

ஆயினும், தற்போது – இந்தப் பாலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில -; புதிய பாலமொன்று அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேற்படி கொட்டுப்பாலத்தினை அகற்றுமாறு இப்பகுதியிலுள்ள விவசாயிகளும், மீனவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சுமார் 04 கிலோமீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொட்டுப் பாலத்தின் கீழ்பகுதியில், சுமார் 10 அடி அகலமுள்ள பகுதியினால் மட்டுமே நீர் ஓடுவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால், ஆற்றின் நீர் போதியளவு ஓடுவது தடைப்பட்டதோடு, பாலத்தினைச் சுற்றி நீர்த்தாவரங்களும் விளைந்து காணப்பட்டன.

அட்டாளைச்சேனைப் பகுதியிலுள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் நெல்வயல்களின் மேலதிக நீர், இந்த ஆற்றினூடாக சென்று கடலில் கலந்து விடும் வாய்ப்புகள் இந்தன. ஆனால், இந்தக் கொட்டுப் பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், வயல் நிலங்களில் தேங்கும் நீரை கடலுக்குக் கொண்டு சேர்ப்பதில் பாரிய தடைகளை விவசாயிகள் எதிர்கொண்டனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான நன்நீர் மீனவர்கள் – மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, தமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான வருமானத்தினைப் பெற்று வந்தனர். ஆனால், இந்தக் கொட்டுப் பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், கோணாவத்தை ஆறு நீரோட்டமின்றி மாசடைந்தது. அதனால், இந்த ஆற்றில் மீன்களின் பெருக்கம் வெகுவாகக் குறைவடைந்தது.. இதனால், இந்த ஆற்றினை நம்பியிருந்த நூற்றுக் கணக்கான நன்நீர் மீனவர்கள் தமது தொழில்களை இழந்தனர்.

இன்னொருபுறம், இந்தப் பாலத்தின் கணிசமான பகுதிகள் சேதமடைந்திருந்தமையினால், இதனூடாக வாகனங்கள் பயணிப்பதிலும் ஆபத்துக்கள் நிலவின.

இதேவேளை, இந்தப் பாலத்தினை புனர்நிர்மாணம் செய்கின்ற பெயரில், தொடர்ச்சியாக அரசாங்க நிதி செலவிடப்பட்டு வந்ததோடு, பாலத்தைச் சுற்றி விளைந்து காணப்பட்ட நீர்த்தாவரங்களை அள்ளி துப்புரவு செய்வதற்காகவும், அடிக்கடி அரசாங்க நிதி செலவிடப்பட்டது.

எனவே, இவ்வாறு பல்வேறு வகையிலும் பொதுமக்களுக்கு பிரச்சினைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தும் மேற்படி கொட்டுப் பாலத்தினை அகற்றுமாறு – அட்டாளைச்சேனைப் பிரதேச விவசாயிகளும், மீனவர்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையிலேயே, தற்போது அட்டாளைச்சேனை கொட்டுப் பாலத்தினை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.bridge-022 bridge-033

Comments

புதிது பேஸ்புக் பக்கம்