வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய, சீன நிறுவனம் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் பேச்சு

🕔 November 16, 2016
hisbullah-08யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும் அப்பகுதிகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீன அரச நிறுவனமான சீ.எஸ்.ஆர். இணக்கம் தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் – சீ.எஸ்.ஆர். நிறுவனத்தின் பிரதித்தலைவர் தலைமையிலான பணிப்பாளர் சபை குழுவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை ராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்திக்கு பல்வேறுபட்ட முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயம் மற்றும் மின்சார துறைகளை முன்னேற்றுவதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும்  இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்