யப்பா; ஆச்சரியப்படுத்தும் முள்ளங்கி
🕔 November 10, 2016


– க. கிஷாந்தன் –
மிகப் பெரிய முள்ளங்கிக் கிழங்கு ஒன்று நபரொருவரின் வீட்டுத் தோட்டத்தில் விளைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த முள்ளங்கி விளைந்துள்ளது.
வியாபார நோக்குடன் செய்கை பண்ணப்பட்டுள்ள இந்த வீட்டுத் தோட்டத்தில், முள்ளங்கி விதைத்து, சுமார் மூன்று மாதங்களுக்கு பின் அறுவடை செய்தபோது, இந்த மாபெரும் முள்ளங்கி கிடைத்துள்ளது.
குறித்த முள்ளங்கி 03 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.

Comments

